நிழல் ...


எந்தன் நிழலின்
இருள் கூட
உன் நினைவுடனே
இருக்கும்
என்றுதான் உந்தன்
காதலெனும்
வெளிச்சம் வரும்
என்று தவிக்கும் ....

குங்குமம் ...!


இனி என்னை மட்டுமே
காதலிக்க வேண்டுமென்று
கணவன் வைக்கும்
முற்றுப்புள்ளி...

காதல் ...!


தனித்து இதமாய் நீ ...
தனித்து தவமாய் நான்...
தனித்துவமாய்
நம் காதல்.....

வசதி ..?


அவன் நன்றாக
இருந்த வீட்டை
இடித்து
மிக நன்றாக கட்டினான் இவன் ... அவனின் வசதி ...?? இவனின் விதி...???

என்னவளுக்காக ....


அன்பே .. நீ போகும்
இடமெல்லாம்
காற்றை
காவலுக்கு
அனுப்பி
வைக்கிறேன் ...
காற்றில்லா
இடம்
என் காதலை....

ஹைகூ ...



இவை மலர்கள் அல்ல
என்னவளின் கட்டில்கள்
அதனால்தான்
இரவானதும் உதிர்கின்றன....

வேண்டுகோள்...



அன்பே.... பிழையாகவாது
என் பெயரை எழுது

நான் பிழைத்துக் கொள்வேன்....

பெண்கள் மன்னிப்பார்களாக.....பாகம் - 1