ஒரு குட்டி காதல் கதை ...!




எனக்கு
பிடித்த ஒன்றையும்
பிடிக்காத ஒன்றையும்
இந்த தாளில்
எழுதியுள்ளேன்,
சொல் உனக்கு எது
பிடித்திருக்கின்றது
என்றொரு தாளை நீட்டினாய்.
தாளை வாங்கிப் படிக்காமலே
"இரண்டுமே " என்றேன்...
ஏன் என்றாய் ?
அந்த இரண்டையுமே
நீ எழுதியுள்ளதால்
என்றேன்...
உனக்கு
என்னை பிடிக்க
ஆரம்பித்திருந்தது ....

நம்ம பய ...

நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம பய யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா .....

புதிர்...!

நீ நாளை
மாக்கோலம் இடுவாயா
இல்லை
மலர்க்கோலம் இடுவாயா
இதுதான்
இரவெல்லாம்
நான் அவிழ்க்க நினைக்கும்
புதிர்...!

மனசு ...


சிற்றுண்டி முடித்து
அலுவுலகம் கிளம்புகையில்
சிறுவுண்டி வைத்து ,
கடவுள் வேடமிட்டு
காசு கேட்கும்
சிறுவனிடம் ,
கடவுள் நம்பிக்கையே
இல்லையெனிலும் ,
காசு போடாமல் போக
வருவதில்லை மனசு...

அவளுக்காக ...!


ஆயிரம் கவிதைகள் அச்சேற்றாமல் அடுக்கி வைத்திருக்கிறேன் என் இதய அறையில்... அவளுக்காக....

என்னை விட்டுவிடாதே ...


வேண்டாம் என்று என்னை
விட்டுவிடாதே...

அதற்கு பதில்
வேகும் நெருப்பில் என்னை தள்ளிவிடு....

நிழல் ...


எந்தன் நிழலின்
இருள் கூட
உன் நினைவுடனே
இருக்கும்
என்றுதான் உந்தன்
காதலெனும்
வெளிச்சம் வரும்
என்று தவிக்கும் ....

குங்குமம் ...!


இனி என்னை மட்டுமே
காதலிக்க வேண்டுமென்று
கணவன் வைக்கும்
முற்றுப்புள்ளி...

காதல் ...!


தனித்து இதமாய் நீ ...
தனித்து தவமாய் நான்...
தனித்துவமாய்
நம் காதல்.....

வசதி ..?


அவன் நன்றாக
இருந்த வீட்டை
இடித்து
மிக நன்றாக கட்டினான் இவன் ... அவனின் வசதி ...?? இவனின் விதி...???

என்னவளுக்காக ....


அன்பே .. நீ போகும்
இடமெல்லாம்
காற்றை
காவலுக்கு
அனுப்பி
வைக்கிறேன் ...
காற்றில்லா
இடம்
என் காதலை....

ஹைகூ ...



இவை மலர்கள் அல்ல
என்னவளின் கட்டில்கள்
அதனால்தான்
இரவானதும் உதிர்கின்றன....

வேண்டுகோள்...



அன்பே.... பிழையாகவாது
என் பெயரை எழுது

நான் பிழைத்துக் கொள்வேன்....

பெண்கள் மன்னிப்பார்களாக.....பாகம் - 1

அவள் கண்கள்





மறந்தும் என்னைப்

பார்க்காத உன் கண்ணை

பார்க்கிறேன்

மறந்து என்னை ...!

இதழ்



இரவெல்லாம் படித்து பார்த்தேன்

ஒன்றும் புரியவில்லை

உன் இதழ் வரிகள்

நாளையாவது புரியுமா

தெரியவில்லை .......!

என் காதல்

நிலவும் மேகக் கூட்டமும்

நீயும் உன் தோழிகளும்

வானமாய் வந்தணைத்து கொள்ள

என் காதல் ஏங்குகின்றது

நிலவின் ஒளி - i

பார்த்து தயங்குகிறது ......

காலம்






காலம் வீணாவதை

சுட்டிகாட்டி கொண்டே இருக்கின்றது

அப்பா வாங்கி கொடுத்த watch ....